Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்த சூழலில், ராஞ்சி நகரில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அதன்பின் மாநில மருத்துவ வாரியம் அளித்த பரிந்துரையின் பேரில் அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் கூறுகையில், கடந்த 2 நாட்களாக லாலுவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது.
வெள்ளிக்கிழமை நிமோனியா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அவரது வயதை கருத்தில் கொண்டு, டாக்டர்களின் அறிவுரைப்படி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.